About Me

My photo
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று

Saturday, February 19, 2011

பயமோ பயம்

யானையைக் கண்டால் சிங்கத்திற்க்கு பயம்

சிங்கத்தைக் கண்டால் புலிக்கு பயம்

புலியைக்கண்டால் கரடிக்கு பயம்

கரடியைக் கண்டால் ஓநாய்க்கு பயம்

ஓநாயைக் கண்டால் நாய்க்கு பயம்

நாயைக்  கண்டால் பூனைக்கு பயம்

பூனையைக் கண்டால் எலிக்கு பயம்

இதில் எதைக் கண்டாலும் எனக்குப்பயம்

Thursday, December 23, 2010

நீக்கலும் ஆக்கலும்

சை அகன்றால்
துன்பம் தெரிவதில்லை
பாசம் பிறந்தால்
பகைமை வருவதில்லை!

நேசம் வளர்ந்தால்
தேசம் உடைவதில்லை
காசு குறைந்தால்
கூட்டம் வருவதில்லை!

மாசு படிந்தால்
மனங்கள் சிரிப்பதில்லை
வீசி நடந்தால்
வேதனை தெரிவதில்லை

தலினாலே
நீக்கலும் ஆக்கலுமே
நிம்மதி தருமே.

Wednesday, December 15, 2010

சிறார் சீர்பெற

மொட்டுக்களை மலர விடுங்கள்
கட்டுக்களை அவிழ்த்து விடுங்கள்
சிட்டுகளை பறக்க செய்யாமல்
சிறகுகளை வெட்டிவிடாதீர்கள்

பட்டுப்போன மரங்களாய்
பச்சை மண்ணை மாற்றாதீர்கள்
சொட்டும் வேர்வையில் நனையவிட்டு
சோர்ந்து போக செய்யாதீர்கள் 

விட்டுப்போன எண்ணிக்கையாய்
கட்டி தங்கத்தை காட்டாதீர்கள்
கட்டு கோப்பாய் கல்வி தராமல்
கெட்டுப்போகச் செய்து விடாதீர் !

பட்டுப்பாயில் நீங்கள் படுக்க
பசுந்தளிர்களை பலியாக்காதீர்  !