ஆசை அகன்றால்
துன்பம் தெரிவதில்லை
பாசம் பிறந்தால்
பகைமை வருவதில்லை!
நேசம் வளர்ந்தால்
தேசம் உடைவதில்லை
காசு குறைந்தால்
கூட்டம் வருவதில்லை!
மாசு படிந்தால்
மனங்கள் சிரிப்பதில்லை
வீசி நடந்தால்
வேதனை தெரிவதில்லை
ஆதலினாலே
நீக்கலும் ஆக்கலுமே
நிம்மதி தருமே.
Thursday, December 23, 2010
Wednesday, December 15, 2010
சிறார் சீர்பெற
மொட்டுக்களை மலர விடுங்கள்
கட்டுக்களை அவிழ்த்து விடுங்கள்
சிட்டுகளை பறக்க செய்யாமல்
சிறகுகளை வெட்டிவிடாதீர்கள்
பட்டுப்போன மரங்களாய்
பச்சை மண்ணை மாற்றாதீர்கள்
சொட்டும் வேர்வையில் நனையவிட்டு
சோர்ந்து போக செய்யாதீர்கள்
விட்டுப்போன எண்ணிக்கையாய்
கட்டி தங்கத்தை காட்டாதீர்கள்
கட்டு கோப்பாய் கல்வி தராமல்
கெட்டுப்போகச் செய்து விடாதீர் !
பட்டுப்பாயில் நீங்கள் படுக்க
பசுந்தளிர்களை பலியாக்காதீர் !
கட்டுக்களை அவிழ்த்து விடுங்கள்
சிட்டுகளை பறக்க செய்யாமல்
சிறகுகளை வெட்டிவிடாதீர்கள்
பட்டுப்போன மரங்களாய்
பச்சை மண்ணை மாற்றாதீர்கள்
சொட்டும் வேர்வையில் நனையவிட்டு
சோர்ந்து போக செய்யாதீர்கள்
விட்டுப்போன எண்ணிக்கையாய்
கட்டி தங்கத்தை காட்டாதீர்கள்
கட்டு கோப்பாய் கல்வி தராமல்
கெட்டுப்போகச் செய்து விடாதீர் !
பட்டுப்பாயில் நீங்கள் படுக்க
பசுந்தளிர்களை பலியாக்காதீர் !
Subscribe to:
Posts (Atom)