மொட்டுக்களை மலர விடுங்கள்
கட்டுக்களை அவிழ்த்து விடுங்கள்
சிட்டுகளை பறக்க செய்யாமல்
சிறகுகளை வெட்டிவிடாதீர்கள்
பட்டுப்போன மரங்களாய்
பச்சை மண்ணை மாற்றாதீர்கள்
சொட்டும் வேர்வையில் நனையவிட்டு
சோர்ந்து போக செய்யாதீர்கள்
விட்டுப்போன எண்ணிக்கையாய்
கட்டி தங்கத்தை காட்டாதீர்கள்
கட்டு கோப்பாய் கல்வி தராமல்
கெட்டுப்போகச் செய்து விடாதீர் !
பட்டுப்பாயில் நீங்கள் படுக்க
பசுந்தளிர்களை பலியாக்காதீர் !
Wednesday, December 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
அடுக்கடுக்கான வரிகளில் அர்த்தம சொல்கிறது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை
ReplyDeleteஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !
ReplyDeleteதங்கள் வருகைகு நன்றி மோனிஷா அவர்களே
ReplyDeleteyou are also started new
congrats and welcome
புதிதாக பதிவுலகிற்கு வந்திருக்கிறீர்கள்..சிறப்பான தொடக்கம்...
ReplyDeleteஆரம்பமே அசத்தல்.பதிவுலகில் தொடர்ந்து கலக்குங்கள்.வாழ்த்துகள்.
ReplyDeleteசங்கர் சார் உங்களுடைய அறிவுரைக்கும்,வருகைக்கும் நன்றி. சரி செய்துவிட்டேன்.
ReplyDeleteதங்கள் வருகைகு நன்றி ஸ்பீட் மாஸ்டர் அவர்களே
ReplyDeleteதங்கள் வருகைகு நன்றி சென்னை பித்தன் அவர்களே
ReplyDeleteதங்கள் வருகைகு நன்றி மர்ம யோகி அவர்களே
ReplyDeleteபட்டுப்பாயில் நீங்கள் படுக்க
ReplyDeleteபசுந்தளிர்களை பலியாக்காதீர்!//
ம்ம் நல்லாருக்கே இது..
அருமை வாழ்த்துக்கள்..